ரோஜ்கர் மேளா: 70,126 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி!

ரோஜ்கர் மேளா: 70,126 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி!

மத்திய, மாநில அரசுத் துறைகளில் 70,126 பேருக்கு பணி  நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக வழங்கினார். 
Published on

மத்திய, மாநில அரசுத் துறைகளில் 70,126 பேருக்கு பணி  நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக வழங்கினார். 

'ரோஜ்கர் மேளா' என்ற மெகா வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும்பொருட்டு பணிக்கான ஆணைகளை வழங்கி வருகிறது. 

இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணி அளவில் காணொலி நிகழ்ச்சி மூலமாக 70,126 பேருக்கு பணி  நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். 

மேலும் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, 'இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் இந்த வேளையில், அரசுப்பணியில் சேருபவர்களுக்கு இது முக்கியமான காலகட்டம். இப்போது புதிதாக நியமிக்கப்படுபவர்கள் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக்கும் முயற்சியில் இருப்பார்கள்' என்றார். 

ரோஜ்கர் மேளாவில் இதுவரை 3,58,000 பணி நியமன ஆணைகள் வழங்ப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com