ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைப் பகுதிக்கு அருகே பயங்கரவாதிகள் பதுங்கியிருந்ததாக வந்த தகவலையடுத்து பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வெள்ளிக்கிழமை காலை பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் வெளிநாட்டு பயங்கரவாதிகள் என்று காஷ்மீர் ஏடிஜிபி விஜய் குமார் தெரிவித்தார்.
தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.