உத்தரப் பிரதேசத்தில் தில்லி - டேராடூன் இடையிலான வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் 7வது முறையாக கல்வீச்சு சம்பவத்தால், வந்தே பாரத் ரயிலின் கண்ணாடி பழுதாகியுள்ளது.
தில்லி - உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் இடையிலான வந்தே பாரத் ரயில் தில்லியிலிருந்து புறப்பட்டுச் சென்றது. உத்தரப் பிரதேசம் வழியாக சென்றுக்கொண்டிருந்தபோது முசாஃபர்நகர் பகுதியில் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் ரயிலின் இ-1 பெட்டியிலிருந்த கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பயணிகளுக்கு இதில் எந்தவித காயமும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்திய நபர் குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக ரயில்வே காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.