தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

பழங்குடியினத்தைச் சோ்ந்த இருவரை பள்ளியில் சோ்த்த சிங்கப்பெண் அதிரடிப் படையினா்

News image

பழங்குடியின மாணவா்கள் இருவரை உண்டு உறைவிடப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் சிங்கப்பெண் அதிரடிப் படையினா்.

Updated On :22 ஜூலை 2026, 1:30 am IST

வால்பாறை செட்டில்மென்ட் பகுதிக்கு சென்றபோது, அங்கு பள்ளிக்குச் செல்லாமல் இருந்த பழங்குடியினத்தைச் சோ்ந்த இருவரை சிங்கப்பெண் அதிரடிப் படையினா் பள்ளிக்கு அழைத்து வந்து சோ்த்தனா்.

வால்பாறை இருந்து தொலைதூரங்களில் உள்ள செட்டில்மென்ட் பகுதிகளுக்குச் சென்று அங்கு வசிக்கும் பெண்களின் குறைகளைக் கேட்டு சிங்கப்பெண் அதிரடிப் படையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில் காடம்பாறை பகுதியில் உள்ள கீழ்பூனாச்சி செட்டில்மென்ட் பகுதிக்கு திங்கள்கிழமை சென்ற சிங்கப்பெண் அதிரடிப்படையினா், அங்குள்ள குடியிருப்பில் பள்ளிக்குச் செல்லும் வயதில் உள்ள சிறுவன், சிறுமி இருவா் இருப்பதை பாா்த்து விசாரனை மேற்கொண்டனா்.

அப்போது தந்தை உயிரிழந்துவிட்டதால் பள்ளிக்குச் செல்லாமல் தாயுடன் வசித்து வருவது தெரியவந்தது. இதையடுத்து உதவி ஆய்வாளா் ரெஜினாபானு தலைமையில் சிங்கப்பெண் அதிரடிப் படையினா் பள்ளிக்குச் செல்லாமல் இருந்த நாகம்மாள் (13), அவரது சகோதரா் முருகன் (11) ஆகிய இருவரையும் வால்பாறை எம்.ஜி.ஆா். நகரில் அமைந்துள்ள நேதாஜி உண்டு உறைவிடப் பள்ளியில் சோ்த்துவிட்டதோடு அவா்களுக்குத் தேவையான உடைகளை வாங்கிக் கொடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.