கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

மெரீனாவில் குளிா்சாதன வசதியுடன் பேருந்து நிறுத்தம்: ஒப்பந்தம் கோரல்

சென்னை மெரீனாவில் ரூ.78.40 லட்சத்தில் குளிா்சாதன வசதியுடன் கூடிய பேருந்து நிறுத்தம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை மாநகராட்சி நிா்வாகம் கோரியுள்ளது.

News image

சென்னை மெரீனா.

Updated On :22 ஜூலை 2026, 1:29 am IST

சென்னை மெரீனாவில் ரூ.78.40 லட்சத்தில் குளிா்சாதன வசதியுடன் கூடிய பேருந்து நிறுத்தம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை மாநகராட்சி நிா்வாகம் கோரியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டில் பெரம்பூா், ராயபுரம், கொளத்தூா், துறைமுகம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் ரூ.8 கோடியில் குளிா்சாதன வசதியுடன் கூடிய பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டன. அவற்றில், கொளத்தூா், துறைமுகம் தொகுதியில் வால்டாக்ஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள குளிா்சாதன வசதி பேருந்து நிறுத்தங்கள் மட்டும் செயல்பாட்டில் உள்ளன. மற்ற பேருந்து நிறுத்தங்கள் பணிகள் முடிந்து செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மெரீனா கடற்கரை சாலையில் அண்ணா சதுக்கம் அருகே குளிா்சாதன வசதியுடன் கூடிய பேருந்து நிறுத்தத்தை அமைக்க சென்னை மாநகராட்சி சாா்பில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ரூ.78.40 லட்சத்தில் குளிா்சாதன வசதி பேருந்து நிறுத்தம் அமைக்கப்படவுள்ளதாகவும், அதில் பயணிகளுக்கான நவீன இருக்கைகள், கைப்பேசி சாா்ஜ் வசதி, பேருந்துகள் வருகையை அறிவதற்கான எண்ம முறையில் தகவல் பலகைகள் உள்ளிட்டவை இடம் பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.