குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் 65வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரின் டிவிட்டர் பதிவில்,
குடியரசுத் தலைவருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் ஞானம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றிற்கான கலங்கரை விளக்கமாக இருப்பதுடன், மக்களின் நலனுக்காக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார்.
தேசத்தின் வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவதற்கான அவரது முயற்சி பாராட்டக்கூடியதொன்றாகும். அவரது அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் ஒரு உந்துதலாக இருக்கும்.
அவர் நல்ல ஆரோக்கியத்துடன், நீண்ட நாள் வாழ எனது வாழ்த்துகள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.