பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தான் ட்ரோன் கண்டெடுப்பு!

பஞ்சாபில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் ஒன்றை எல்லை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். 
பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தான் ட்ரோன் கண்டெடுப்பு!

பஞ்சாபில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் ஒன்றை எல்லை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். 

பஞ்சாப் மாநிலம் ஃபசில்கா மாவட்டம் ஜோதவாலா கிராமத்தில் சர்வதேச எல்லைக்கு அருகே பாகிஸ்தானின் டிஜேஐ மேட்ரிஸ் 300 ஆர்டிகே (DJI Matrice 300 RTK) என்ற ஆளில்லா விமானத்தை இன்று(வியாழக்கிழமை) காலை எல்லை பாதுகாப்புப் படையினர் மீட்டனர். 

மேலும், ஹெராயின் என சந்தேகிக்கப்படும் 2 கிலோ எடையுள்ள இரண்டு போதைப்பொருள் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com