இனி எங்கள் போராட்டம் சாலைகளில் அல்ல; நீதிமன்றத்தில் தொடரும்: சாக்ஷி மாலிக் ட்வீட்

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகாா் தொடர்பான போராட்டம் இனி சாலையில் அல்ல; நீதிமன்றத்தில் தொரும்.
இனி எங்கள் போராட்டம் சாலைகளில் அல்ல; நீதிமன்றத்தில் தொடரும்: சாக்ஷி மாலிக் ட்வீட்


புதுதில்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகாா் தொடர்பான போராட்டம் இனி சாலையில் அல்ல; நீதிமன்றத்தில் தொரும் என்று மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகாா் கூறி, கடந்த ஒரு மாதமாக தில்லி ஜந்தா் மந்தரில் நட்சத்திர மல்யுத்த வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், விக்னேஷ் போகட், வீரா் பஜ்ரங் புனியா உள்ளிட்டோா் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

பிரிஜ் பூஷண் சிங் மீது நடவடிக்கை கோரி வீராங்கனைகள் தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த தில்லி போலீஸாருக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், கடந்த 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்டவுடன், தில்லி ஜந்தா் மந்தரில் இருந்து இவா்கள் தடையை மீறி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்றனா்.

அவா்களைத் தடுத்து நிறுத்தி தடுப்புக் காவலில் கொண்டு சென்ற தில்லி போலீஸாா், சாக்ஷி மாலிக், விக்னேஷ் போகட், பஜ்ரங் புனியா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

மேலும், தில்லி ஜந்தா் மந்தரில் தொடா் போராட்டம் நடத்திய இடத்தில் இருந்து பொருள்களை அப்புறப்படுத்தினா். தில்லியில் வேறு இடத்தில் போராட்டம் நடத்த அவா்கள் அனுமதிக்கப்படுவாா்கள் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், உலக அரங்கில் பதக்கம் வென்ற தங்களை குற்றவாளிகளைப் போல் போலீஸாா் கைது செய்ததையும், பிரிஜ் பூஷண் சிங்கை கைது செய்யாமல் இருப்பதையும் கண்டித்து தங்களது சா்வதேச பதக்கங்களை ஹரித்வாரில் உள்ள கங்கையில் வீசப்போவதாக 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் ட்விட்டரில் பதிவிட்டாா்.

மேலும் தவறு செய்தவரைப் பிடிக்காமல், அரசு அமைப்பு எங்களது போராட்டத்தை தடுத்து நிறுத்தி சிறைக்கு அனுப்பத் திட்டமிடுகிறது. நாங்கள் பெற்ற பதக்கங்களுக்கு எந்தவித மதிப்பும் இல்லை என்பதால் இதைத் திருப்பி அளிக்கிறோம். எங்கள் பிரச்னையில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவும், பிரதமா் மோடியும் தலையிட்டு தீா்வு காண விரும்பினோம்’ என்று பதிவிட்டிருந்தாா்.

இதற்கு உலக மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற விக்னேஷ் போகட், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா ஆகியோரும் ஆதரவு தெரிவித்தனா்.

இதையடுத்து, ஹரித்வாா் கங்கை நதிக் கரையில் பதக்கங்களை வீச சென்றவர்களைத் தடுத்து நிறுத்திய விவசாய சங்கப் பிரதிநிதிகள், இவா்களின் பதக்கங்களை ஒன்றாக சேமித்து எடுத்துச் சென்றனா்.

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்துக்கு ஆதரவாகவும், பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிராக பலதரப்பினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். 

ஒரு மாதத்திற்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வீரர், வீராங்கனைகள் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூரை சந்தித்து சில கோரிக்கைகளை வலியுறுத்தியதை அடுத்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் தில்லி போலீசார் பிரிஜ் பூஷனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், சாக்ஷி மாலிக், விக்னேஷ் போகட், வீரா் பஜ்ரங் புனியா உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை ஒரே மாதிரியாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

அந்த பதிவில், பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிரான இந்த வழக்கில், எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். ஆனால், அது சாலையில் அல்ல, நீதிமன்றத்தில் தொடரும் என்று பதிவிட்டுள்ளனர். 

இந்திய மல்யுத்த சம்மேளனத்தில் சீர்திருத்தம் தொடர்பாக, வாக்குறுதி அளித்தப்படி, தலைவர் தேர்தலுக்கான பணிகள் தொடங்கியுள்ளது.

ஜூலை 11 ஆம் தேதி தேர்தல் தொடர்பாக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை நாங்கள் காத்திருப்போம் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, வினேஷ் மற்றும் சாக்ஷி ஆகியோர் சில நாட்கள் சமூக ஊடகங்களில் இருந்து ஓய்வு எடுப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். 

வினேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், மல்யுத்த வீரர்கள் கடந்த 6 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டதால், பயிற்சிக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை, அதனால் விசாரணை தேதியை ஒத்திவைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளோம். இது தீவிரமான விஷயம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். 

அதனால் தான் இப்போது இதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். மல்யுத்த வீரர்களிடையே ஒற்றுமையை உடைக்க எதிரிகள் முயற்சி செய்வார்கள். அவர்களை வெற்றி பெற அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார். 

வீரர்கள் 6 பேரின் கையெழுத்திட்ட கடிதத்தையும் அமைச்சருக்கு அனுப்பியுள்ளனர்.

மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார் தொடர்பாக வழக்கு தில்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இவ்வாறு பதிவிட்டுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com