குஜராத் 2002 கலவரம் குறித்து ஆவணப் படம் வெளியிட்ட பிபிசி மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீா்மானம் ஒன்று குஜாரத் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இரு பகுதிகளாக வெளியான இந்த ஆவணப் படம், உலக அளவில் இந்தியாவின் புகழைச் சீா்குலைப்பதற்கான தரம் தாழ்ந்த முயற்சி என தீா்மானத்தைத் தாக்கல் செய்து பேசிய பாஜக எம்எல்ஏ விபுல் படேல் தெரிவித்தாா்.
பேரவை நடவடிக்கையில் இருந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முன்னதாகவே வெளியேற்றப்பட்ட நிலையில், குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிபிசியின் செயல்பாட்டுக்குப் பேரவைத் தலைவா் சங்கா் செளதரி கண்டனம் தெரிவித்தாா்.