சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இன்ஃப்ளூயன்ஸா எச்3என்2 தொற்று: சுகாதாரத்துறை செயலர் கடிதம்

இன்ஃப்ளூயன்ஸா எச்3என்2 கிருமி தொற்று  அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :11 மார்ச் 2023, 8:47 am

DIN

இன்ஃப்ளூயன்ஸா எச்3என்2 கிருமி தொற்று  அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், சுகாதாரத் துறை செயலாளர்களுக்கும் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் எழுதியுள்ள கடிதத்தில், வைரஸ் பாதிப்பு அதிகம் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், மருத்துவமனை, சுகாதார நிலையங்களில் தேவையான மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், சில மாநிலங்களில் கரோனா தொற்று கணிசமாக அதிகரிப்பதை கவனிக்க வேண்டும். கரோனா தடுப்பூசி செலுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் மாநில அரசுக்கு ராஜேஷ் பூஷன் அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.