நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி! தவெக அரசுக்கு 144 பேர் ஆதரவு! நம்பிக்கை வாக்கெடுப்பு: திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு! குதிரை வேகத்தில் செயல்படும் அரசு; குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசு அல்ல! விஜய் பேச்சுபுஸ்பா பட பாணியில் சோபா ஆட்சி செய்யும் விஜய்! உதயநிதி கடும் விமர்சனம்! நம்பிக்கை வாக்கெடுப்பு! பேரவைக்கு வராமல் மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு!நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக நடுநிலை! - எம்.எல்.ஏ. போஜராஜன்தவெகவில் குதிரை பேரம் நடந்தது; ஜோதிடருக்கு எதற்கு அரசுப் பதவி? பிரேமலதா
/

இன்ஃப்ளூயன்ஸா எச்3என்2 தொற்று: சுகாதாரத்துறை செயலர் கடிதம்

இன்ஃப்ளூயன்ஸா எச்3என்2 கிருமி தொற்று  அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :11 மார்ச் 2023, 2:17 pm IST

இன்ஃப்ளூயன்ஸா எச்3என்2 கிருமி தொற்று  அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், சுகாதாரத் துறை செயலாளர்களுக்கும் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் எழுதியுள்ள கடிதத்தில், வைரஸ் பாதிப்பு அதிகம் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், மருத்துவமனை, சுகாதார நிலையங்களில் தேவையான மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், சில மாநிலங்களில் கரோனா தொற்று கணிசமாக அதிகரிப்பதை கவனிக்க வேண்டும். கரோனா தடுப்பூசி செலுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் மாநில அரசுக்கு ராஜேஷ் பூஷன் அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.