மாண்டியா மக்களின் அன்பான வரவேற்புக்கு நன்றி: பிரதமர் மோடி

பிரதமர் மோடி, மாண்டியா மக்களின் வரவேற்புக்கு நன்றி தெரிவித்துள்ளார். 
மாண்டியா மக்களின் அன்பான வரவேற்புக்கு நன்றி: பிரதமர் மோடி

பிரதமர் மோடி, மாண்டியா மக்களின் வரவேற்புக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பல்வேறு நலத்திட்டங்களைத் தொடக்கி வைக்க இன்று கர்நாடகம் வருகை தந்த பிரதமர் மோடிக்கு மாண்டியா மாவட்டத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சாலையில் இரு புறங்களிலும் தொண்டர்கள் குவிந்திருந்தனர். 

பாதுகாப்பு அதிகாரிகளைத் தொடர்ந்து பின் தொடர்ந்து சென்ற பிரதமரின் காருக்கு பூக்களைத் தூவி வரவேற்றனர். காரின் கதவருகே நின்றவாரு தொண்டர்களை நோக்கி பிரதமர் மோடி கையசைத்து வரவேற்பை ஏற்றுக்கொண்டார். 

இந்த நிலையில் பிரதமர் மோடி, மாண்டியா மக்களின் வரவேற்புக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ ஒன்றை பதிவு செய்து அருமையான வரவேற்புக்கு நன்றி, மாண்டியா எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com