அமளியால் முடங்கிய நாடாளுமன்றம்: பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டதால் பிற்பகல் 2 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
அமளியால் முடங்கிய நாடாளுமன்றம்: பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டதால் பிற்பகல் 2 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளிலும் தொடங்கியது.

இந்நிலையில், அவை தொடங்கியதுடன் இந்திய நாடாளுமன்றத்தை பற்றி பிரிட்டனில் ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென்று மக்களவையில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் பிரஹலாத் ஜோஷியும், மாநிலங்களவையில் பியூஷ் கோயலும் பேசினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணிவரை அவைகள் ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com