4வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்: அமைச்சர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! 

நாடாளுமன்றத்தில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனைகளை நடத்தி வருகிறார். 
4வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்: அமைச்சர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! 

நாடாளுமன்றத்தில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனைகளை நடத்தி வருகிறார். 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது கட்ட அமர்வு, கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. ஆனால், ஆளும்கட்சி-எதிர்க்கட்சி உறுப்பினா்களின் அமளி காரணமாக, தொடர்ந்து 3 நாள்களாக எவ்வித விவாதமும் நடைபெறாமல் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், நாடாளுமன்றம் இன்று காலை கூடியவுடன் இரு அவைகளிலும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரி, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் பதாகைகளுடன் அவையின் மையப்பகுதியில் முற்றுகையிட்டு, முழக்கம் எழுப்பினா். இதையடுத்து இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே நாடாளுமன்ற வளாகத்தில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், நரேந்திர சிங் தோமர், அனுராக் தாகூர், கிரண் ரிஜ்ஜூ, பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com