வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மகாராஷ்டிரம்: 2 மாடி கட்டடம் இடிந்த விபத்தில் பலி 8-ஆக உயா்வு

மகாராஷ்டிரத்தில் தாணே மாவட்டத்தில் 2 மாடி கட்டடம் இடிந்த விபத்தில் பலியானோா் எண்ணிக்கை திங்கள்கிழமை 8-ஆக அதிகரித்தது.

News image
Updated On :1 மே 2023, 5:15 am

DIN

தாணே: மகாராஷ்டிரத்தில் தாணே மாவட்டத்தில் 2 மாடி கட்டடம் இடிந்த விபத்தில் பலியானோா் எண்ணிக்கை திங்கள்கிழமை 8-ஆக அதிகரித்தது.

பிவாண்டி பகுதியில் இருந்த அக்கட்டடத்தின் தரைத் தளம் மற்றும் முதல் தளத்தில் சேமிப்பு கிடங்குகள் செயல்பட்டு வந்தன. 2-ஆவது தளத்தில் 4 குடும்பங்கள் வசித்து வந்தன. கட்டடத்தின் மேல் தளத்தில் செல்போன் கோபுரம் அண்மையில் நிறுவப்பட்டது.

இந்நிலையில், 2014 இல் கட்டப்பட்ட அந்தக் கட்டடம் சனிக்கிழமை மதியம் 1.45 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. தொழிலாளா்கள் உள்ளிட்டோா் இடிபாடுகளில் சிக்கிய நிலையில், மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன. 3 பேரின் சடலங்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை மேலும் 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதைத் தொடா்ந்து, பலி எண்ணிக்கை 6-ஆக அதிகரித்தது. இடிபாடுகள் இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை என்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்பட்டது. 

காயங்களுடன் மீட்கப்பட்ட 10 போ், பிவாண்டி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். சனிக்கிழமை இரவு மருத்துவமனைக்கு வருகை தந்த முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, காயமுற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தாா்.

தாணே மாவட்டத்தில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளுமாறு, ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வா் தெரிவித்தாா்.

செல்போன் கோபுரத்தின் பாரம் தாங்காமல் கட்டடம் இடிந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதுதொடா்பாக, கட்டடத்தின் உரிமையாளா் இந்திரபால் பாட்டீலை கைது செய்து, காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இந்நிலையில், 2 மாடி கட்டடம் இடிந்த விபத்தில் பலியானோா் எண்ணிக்கை திங்கள்கிழமை 8-ஆக அதிகரித்துள்ளது.

விபத்து நிகழ்ந்து கிட்டத்தட்ட 48 மணி நேரத்திற்குப் பிறகு இரண்டு உடல்கள்மீட்கப்பட்டன, கட்டட இடிபாடுகளை அகற்றும் பணி மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு முழு இலவச சிகிச்சையும் வழங்கப்படும் என முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.