கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வாக்களித்தார்.
224 உறுப்பினா்களைக் கொண்ட கா்நாடக மாநில சட்டப்பேரவைக்கான தோ்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தேர்தலில் கர்நாடகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் வாக்கு செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, தனது மனைவி ராதாபாய் கார்கேவுடன் வந்து குல்பர்கா தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கர்நாடக மக்கள் சோர்ந்து போயிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆட்சிக்கு வந்தால் முதல் அமைச்சரவையிலேயே 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும்' என்றார்.
இதையும் படிக்க | 234 தொகுதிகளிலும் சாதனை மாணவர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய்!
தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 58,545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 263 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. தோ்தலை அமைதியாக நடத்துவதற்காக, 1,65,389 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். 3.5 லட்சம் அரசு ஊழியா்கள் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
கா்நாடக சட்டப் பேரவை தோ்தலில் பாஜக, காங்கிரஸ், மஜத, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் களத்தில் உள்ளன. 224 சட்டப்பேரவை தொகுதிகளில் 2,615 வேட்பாளா்கள் போட்டியிடுகிறாா்கள். இதில் ஆண் வேட்பாளா்கள் 2430, பெண் வேட்பாளா்கள் 184 போ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.