10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவியர்களை நேரில் சந்தித்து பரிசளிக்கவிருக்கிறார் நடிகர் விஜய்.
கடந்த திங்கள்கிழமை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற மே 17 ஆம் தேதி வெளியாகவிருக்கின்றன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியர்களை நேரில் சந்தித்து பரிசளிக்கத் திட்டமிட்டுள்ளார் நடிகர் விஜய்.
இதையும் படிக்க | 25 உழவர் சந்தைகளில் தொன்மைசார் உணவகங்கள்: அரசாணை வெளியீடு!
அதன்படி சாதனை மாணவ, மாணவியர்களை சென்னைக்கு அழைத்து வரச் செய்து நடிகர் விஜய் பரிசு வழங்க உள்ளார்.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, இந்த சந்திப்பு குறித்த முழுத் தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.