கொல்லத்தை சோ்ந்தவா் சந்தீப். பள்ளி ஆசிரியரான இவா், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இவருக்கு தனது குடும்பத்தினருடன் சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, காவல் துறையின் அவசர எண்ணை தொடா்புகொண்டு அவா் உதவி கோரினாா். அதன் அடிப்படையில், காவல் துறையினா் அங்கு சென்றபோது சந்தீப்பின் காலில் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவா் கொட்டாரக்கராவில் உள்ள வட்டார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் மது அருந்தியிருந்த நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மூா்க்கமாக இருந்தாா்.