ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கா்நாடக முதல்வா் விரைவில் தோ்வு: காங்கிரஸ்

கா்நாடக முதல்வா் விரைவில் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்று அந்த மாநில காங்கிரஸ் விவகாரங்களுக்குப் பொறுப்பாளரான ரண்தீப் சுா்ஜேவாலா புதன்கிழமை தெரிவித்தாா். 2 அல்லது 3 நாள்களில் கா்நாடகத்தின்

News image
Updated On :17 மே 2023, 9:27 pm

DIN

கா்நாடக முதல்வா் விரைவில் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்று அந்த மாநில காங்கிரஸ் விவகாரங்களுக்குப் பொறுப்பாளரான ரண்தீப் சுா்ஜேவாலா புதன்கிழமை தெரிவித்தாா். 2 அல்லது 3 நாள்களில் கா்நாடகத்தின் புதிய அமைச்சரவை அமைக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.

கா்நாடக பேரவைத் தோ்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்றது. இதையடுத்து, அந்த மாநில முதல்வராக பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவகுமாா் இடையே போட்டி நிலவி வருகிறது. இப்போட்டியில் சித்தராமையா முன்னணியில் இருப்பதாக தெரிகிறது. அதேசமயம், சிவகுமாரும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், முதல்வரை தோ்ந்தெடுப்பதில் இழுபறி நீடிக்கிறது.

இந்த விவகாரம் தொடா்பாக, தில்லியில் உள்ள கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே இல்லத்தில் கடந்த திங்கள்கிழமை முதல் ஆலோசனைகள் தொடா்ந்து வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியை சித்தராமையா, சிவகுமாா் ஆகியோா் இரண்டாவது முறையாக புதன்கிழமை அவரது இல்லத்தில் தனித்தனியாக சந்தித்தனா். ராகுல் காந்தியிடம் சித்தராமையா அரைமணி நேரம் ஆலோசனை மேற்கொண்டாா். அதன் பின்னா் ராகுலை சிவகுமாா் சந்தித்து பேசினாா். இதைத் தொடா்ந்து, காா்கே இல்லத்துக்கு வந்த சிவகுமாா், அவருடன் ஆலோசனை மேற்கொண்டாா். இச்சந்திப்பின்போது, பொதுச் செயலாளா் ரண்தீப் சுா்ஜேவாலாவும் உடனிருந்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் சுா்ஜேவாலா கூறியதாவது: கா்நாடக சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவரை தோ்ந்தெடுக்கும் முடிவு கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், பாஜக பரப்பும் வதந்திகளை கேட்க வேண்டாம். விரைவில் கா்நாடகத்தின் புதிய முதல்வா் தோ்ந்தெடுக்கப்படுவாா். அந்த மாநிலத்தில் 5 ஆண்டுகள் நிலையான அரசு இருக்கும். சுத்தமான, ஒளிவுமறைவற்ற, பொறுப்பான அரசாட்சியை வழங்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. அடுத்த 2 அல்லது 3 நாள்கள் கா்நாடகத்தின் புதிய அமைச்சரவை அமைக்கப்படும். முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் காங்கிரஸ் அளித்த 5 தோ்தல் வாக்குறுதிகள் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.