ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

விடைபெறும் ரூ.2,000! அதிக மதிப்புள்ள நோட்டாக மாறும் ரூ.500 - முழு விவரம்

இது அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் உலகிலேயே மிகக் குறைந்த மதிப்புள்ள ரூபாயாகக் கருதப்படுகிறது.

News image
Updated On :25 மே 2023, 5:59 pm IST

புது தில்லி: நாட்டில் புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, இனி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்காது. எனவே, புழக்கத்தில் இருக்கும் பணத்தில் அதிக மதிப்புகொண்டதாக ரூ.500 நோட்டுகளே இருக்கும்.

ஆனால், இது அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் உலகிலேயே மிகக் குறைந்த மதிப்புள்ள ரூபாயாகக் கருதப்படுகிறது. அதாவது, 500 ரூபாய் நோட்டுக்கு வெறும் 6.1 டாலர் மதிப்புதான் உள்ளது. 

ஜப்பானில் அதிகபட்ச மதிப்புள்ள நோட்டாக 10,000 யென் உள்ளது. இது 7.6 அமெரிக்க டாலருக்கு நிகரானது. அதுபோல சீனாவின் 100 யுவான் நோட்டுகள் 14.3 அமெரிக்க டாலருக்கு நிகரானதாக உள்ளது.

உலகிலேயே அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டை வைத்திருப்பது சிங்கப்பூர்தான். இங்குள்ள 100 சிங்கப்பூர் டாலர், 750 அமெரிக்க டாலருக்கும், ஐரோப்பிய யூனியனின் 500 யூரோ 541 அமெரிக்க டாலருக்கும் நிகரானது என்று கூறப்படுகிறது.

Story image

எனவே, இதன் மூலம், உலகிலேயே மிகக் குறைவான, அதிகமதிப்புள்ள ரூபாய் நோட்டை அதாவது ரூ.500ஐ கொண்டிருக்கும் நாடாக இந்தியா மாறுகிறது. எனவே, இதனை சமாளிக்க 1000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படுமா என்ற ஆவல் எழுந்துள்ளது.

ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் விளக்கியிருக்கிறார்.

டிஜிட்டல் எனும் எண்ம முறையில் பணப்பரிமாற்றங்கள் அதிகளவில் நடைபெறும் நம் நாட்டில், அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் இருப்பது அவசியமா? என்றும், ரூபாய் நோட்டுகளுக்கு எண்ம பணப்பரிமாற்ற முறைகள் கடும் சாவாலாக மாறியிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஒரு நாட்டில் அதிக பணவீக்கம் இருந்தால், அந்த நாட்டுக்கு அதிக மதிப்புள்ள நோட்டுகள் தேவைப்படும் என்று பெங்களூரு டாக்டர் அம்பேத்கர் பொருளாதார பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்ஆர் பானுமூர்த்தி ஒப்புக்கொள்கிறார்.

இருப்பினும், ரூபாய் நோட்டின் மதிப்பை விட, ரூபாய் நோட்டின் புழக்கத்தின் வேகம் (எவ்வளவு அடிக்கடி மாற்றப்படுகிறது) என்பதும் முக்கியம் என்றும் நம்பப்படுகிறது. ஏற்கனவே புழக்கத்தில் குறைவாக இருந்த ரூ.2,000 நோட்டுகள், பரிவர்த்தனைகளுக்கும் அரிதாகவே பயன்படுத்தப்பட்டது என்று பொருளாதார பேராசிரியர்கள் கருதுகிறார்கள்.

புழக்கத்தில் அதிகம் இருக்கும் எந்த ரூபாய் நோட்டுகளும், அடிக்கடி பயன்படுத்தப்படும். எனவே, எந்த ரூபாய் நோட்டு அதிகமாக அச்சிடப்படுகிறது என்பது பணப்புழக்கத்தின் வேகத்தைப் பொறுத்துதான் முடிவு செய்யப்படும். இங்கு உயர் மதிப்புடைய நோட்டின் புழக்கம் மிகக் குறைவு என்று ஓபி ஜிண்டால் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தீபன்சு மோகன் கூறுகிறார்.

2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து எடுத்தது சரியானது என்று பெரும்பாலான நிபுணர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் நம்புகிறார்கள், ஆனால் அதனை மேற்கொண்ட நடைமுறைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. 

சிலர், இதனை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்கலாம் என்று கருதுகிறார்கள். அதேவேளையில், அடிக்கடி ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்யும்போது, ஒரு நாட்டின் ரூபாய் நோட்டு மீது நம்பிக்கையில்லா மனப்பான்மை வளர்ந்துவிடும் என்றும் கருத்துகள் முன்வைக்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.