தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

பா.ஜ.க.வினருக்கு மதவாதத்தை தவிர வேறு ஒன்றும் தெரியாது: சத்தீஸ்கர் முதல்வர் சாடல்!

பாஜகவினரின் சிந்தனை முழுவதும் வன்முறையும், வெறுப்பும் மட்டுமே உள்ளது என சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் பேசினார். 

News image
கோப்புப்படம்
Updated On :1 நவம்பர் 2023, 9:22 am

DIN

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் கலந்துகொண்டு பேசினார். 

அவர் பேசியதாவது: “பா.ஜ.க.வுக்கு மதவாதத்தை தவிர வேறு எதைப் பற்றியும் தெரியாது. குறுகிய தேர்தல் வெற்றிக்காக இரு சமூகத்தினரிடையே சண்டையைத் தூண்டிவிட்டு நீண்டகால பகையை மூட்டிவிடுவதை தவிர அவர்கள் வேறு எந்த வேலையும் செய்வதில்லை. 

பாஜகவினரின் சிந்தனை முழுவதும் வன்முறையும், வெறுப்பும் மட்டுமே உள்ளன. மக்களை பொருளாதாரம் பற்றி சிந்திக்க விடாமல் அனைத்து நேரமும் மதத்தைப் பற்றியே விவாதங்களைக் கிளப்புவார்கள். 

மக்கள் அவர்களின் வெறுப்பு பிரச்சாரங்களுக்கு ஆளாகிவிடக் கூடாது. பசுமையாக காட்சியளித்த சத்தீஸ்கர் மாநிலம் பாஜக முதல்வர் ரமண்சிங் ஆட்சியில் சிவப்பாக மாறியது.” என்று பூபேஷ் பாகல் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.