காங்கிரஸில் இணைந்த பாஜக மூத்த தலைவர்!

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான விவேகானந்த் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
காங்கிரஸில் இணைந்த பாஜக மூத்த தலைவர்!
Published on
Updated on
1 min read

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான விவேகானந்த் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், மிஸோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு நவம்பர் மாதத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி தேசிய, மாநில கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இதில், தெலங்கானா மாநிலத்துக்கு வருகிற நவம்பர் 30 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்நிலையில், தெலங்கானாவில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான விவேகானந்த் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தெலங்கானா மாநில பாஜக தலைவர் கிஷன் ரெட்டிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். 

பாஜகவில் இருந்து விலகிய விவேகானந்த், காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். வரும் தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஒரு வாரத்திற்கு முன்னதாக பாஜகவில் இருந்து கோமதிரெட்டி ராஜ் கோபால் ரெட்டி பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com