2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதலால் பரபரப்பு!

சத்தீஸ்கரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், நக்சலைட்டுகள் தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :7 நவம்பர் 2023, 10:38 am

DIN

சத்தீஸ்கரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், நக்சலைட்டுகள் தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 3 வீரர்கள் காயமடைந்துள்ளனர். 

சத்தீஸ்கரில் 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதனிடையே சுக்மா பகுதியில் இன்று நக்சல்கள் தாக்குதல் நடைபெற்றது. ஒர்ச்சா காவல் நிலையம் அருகே உள்ள வனப்பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. 

இதையடுத்து நக்சல்கள் தப்பித்து ஓடியதால் அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

சுமார் 10 நிமிடங்கள் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாகவும் அதன்பின்னர் நக்சல்கள் தப்பித்து ஓடியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரத்தில் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறினர். 

நக்சல்கள் தாக்குதலையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இதையடுத்து இன்று பிற்பகல் சுக்மா மாவட்டத்தில் மின்பா பகுதியில் இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் 3 வீரர்கள் காயமடைந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.