எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திகார் சிறையில் கைதிகளுக்கு மதுபானம்? - விசாரணைக் குழு அமைப்பு

தில்லியில் உள்ள திஹார் சிறையில் கைதிகளுக்கு மதுபானம் வழங்கப்படுவதாகக் கூறப்பட்டதையடுத்து விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :8 நவம்பர் 2023, 6:44 am

DIN

தில்லியில் உள்ள திஹார் சிறையில் கைதிகளுக்கு மதுபானம் வழங்கப்படுவதாகக் கூறப்பட்டதையடுத்து விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். 

தில்லியில் உள்ள திஹார் சிறையில் அறை எண் 7-ல் உள்ள கைதிகளுக்கு மதுபானம் வழங்கப்படுவதாகவும், சில கூடுதல் வசதிகள் வழங்கப்படுவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில் இதுதொடர்பாக துணைக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட சில அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும், சிறைத்துறை இயக்குநர் ஜெனரல் சஞ்சய் பெனிவால் இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும் விசாரணைக் குழுவுக்கு டிஐஜி அளவிலான அதிகாரி ஒருவர் தலைமை தாங்குவார் என்றும் தெரிவித்தார். 

மேலும் இந்த குழு ஆய்வு செய்து அடுத்த 10 நாள்களில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.