அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் 4,798 பேர் வேட்புமனு தாக்கல்!

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 4,798 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :12 நவம்பர் 2023, 7:31 pm

DIN

தெலங்கானா சட்டப்பேரவைத் தோ்தல் நவம்பா் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் முதல்வா் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் களமிறங்கியுள்ளது. பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 3-ஆம் தேதி துவங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நவம்.10 ம் தேதி முடிவடைந்தது. நவம்.13-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 15-ஆம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் ஆகும்.

மொத்தமுள்ள 119 தொகுதிகளிலும் ஆளும் பி.ஆர்.எஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி 118 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாஜக 111 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

119 தொகுதிகளில் போட்டியிடும் 4,798 வேட்பாளர்கள் 5,716 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக கஜ்வெல் தொகுதியில் 145 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இத்தொகுதியில் முதல்வர் சந்திரசேகர ராவ் மீண்டும் போட்டியிடுகிறார். 

மேட்ச்சல் தொகுதியில் 116 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக நாராயணப்பேட்டை தொகுதியில் 19 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

அக்டோபர் 9-ஆம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் தேர்தல் நன்னடத்தை விதிகளும் அமலுக்கு வந்தன. அதைத் தொடர்ந்து  நவம்.11-ஆம் தேதி வரை ரூ.544 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

119 தொகுதிகள் அடங்கிய தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ஆம் தேதி எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.