மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உத்தரப் பிரதேசம்: நின்று கொண்டிருந்த வேன் மீது கார் மோதியதில் 6 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தின் முசாபர் நகரில் நின்று கொண்டிருந்த வேன் மீது கார் மோதிய விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். 

News image
கோப்புப்படம்
Updated On :14 நவம்பர் 2023, 12:26 pm

DIN

உத்தரப் பிரதேசத்தின் முசாபர் நகரில் நின்று கொண்டிருந்த வேன் மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

செவ்வாய்க்கிழமை ராம்பூர் திராஹா அருகே தேசிய நெடுஞ்சாலை 58-இல் நின்று கொண்டிருந்த வேன் மீது கார் மோதியதில் தில்லியைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்தனர். 

தில்லியின் ஷாதரா பகுதியைச் சேர்ந்த சிவம், குணால், தீரஜ், விஷால் உள்ளிட்ட ஆறு பேரும் ஹரித்வாருக்கு காரில் சென்றபோது இந்த விபத்து நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி வினய் கௌதம் கூறுகையில், “விபத்து குறித்து எங்களுக்கு தகவல் வந்ததன் அடிப்படையில் உடனடியாக அங்கு சென்றோம். ஆனால் ஆறுபேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். அதைத் தொடர்ந்து அவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு, உடல்களை உடற்கூறாய்வுக்கு அனுப்பினோம். விரைந்து அப்பகுதியில் போக்குவரத்தை சீரமைத்தோம்” என்று கூறினார். 

சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், “விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். விபத்தில் காயமடைந்தவர்களை உரிய கவனம் அளித்து சிகிச்சை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.