விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

உத்தரப் பிரதேசம்: நின்று கொண்டிருந்த வேன் மீது கார் மோதியதில் 6 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தின் முசாபர் நகரில் நின்று கொண்டிருந்த வேன் மீது கார் மோதிய விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். 

News image

கோப்புப்படம்

Updated On :14 நவம்பர் 2023, 5:56 pm IST

உத்தரப் பிரதேசத்தின் முசாபர் நகரில் நின்று கொண்டிருந்த வேன் மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

செவ்வாய்க்கிழமை ராம்பூர் திராஹா அருகே தேசிய நெடுஞ்சாலை 58-இல் நின்று கொண்டிருந்த வேன் மீது கார் மோதியதில் தில்லியைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்தனர். 

தில்லியின் ஷாதரா பகுதியைச் சேர்ந்த சிவம், குணால், தீரஜ், விஷால் உள்ளிட்ட ஆறு பேரும் ஹரித்வாருக்கு காரில் சென்றபோது இந்த விபத்து நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி வினய் கௌதம் கூறுகையில், “விபத்து குறித்து எங்களுக்கு தகவல் வந்ததன் அடிப்படையில் உடனடியாக அங்கு சென்றோம். ஆனால் ஆறுபேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். அதைத் தொடர்ந்து அவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு, உடல்களை உடற்கூறாய்வுக்கு அனுப்பினோம். விரைந்து அப்பகுதியில் போக்குவரத்தை சீரமைத்தோம்” என்று கூறினார். 

சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், “விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். விபத்தில் காயமடைந்தவர்களை உரிய கவனம் அளித்து சிகிச்சை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.