மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தெலங்கானா தேர்தல்: பாஜக தேர்தல் அறிக்கையை நவம்.18-ல் வெளியிடுகிறார் அமித்ஷா!

தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை நாளை (சனிக்கிழமை) வெளியிடுகிறார் அமித்ஷா.

News image
Updated On :17 நவம்பர் 2023, 7:19 am

DIN

தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை அமித்ஷா நாளை (நவம்.18) வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு நவம்.30-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான மும்முனை போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா சனிக்கிழமை வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாரங்கல், நால்கொண்டா, கத்வால் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டங்களிலும் கலந்துகொள்ள உள்ளார். 

பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு முன்பாக, சனிக்கிழமை காலை 10 மணிக்கு பாஜகவின் தேர்தல் அறிக்கையை உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிடுகிறார்.

நவம்.30-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, வரக்கூடிய நாட்களில் பாஜக சார்பில் நடைபெறும் கூட்டங்களில் மத்திய அமைச்சர்கள் பலர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

நான்கு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுவதற்கு பிரதமர்  மோடியை அழைத்துள்ளதாகவும், அவரின் பதிலுக்கு காத்திருப்பதாகவும் தெலங்கானா மாநில பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ஜி.கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.