மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

மலையாள எழுத்தாளர் பி.வல்சலா காலமானார்

மலையாள எழுத்தாளரும், சாகித்ய அகாதெமியின் முன்னாள் தலைவருமான பி.வல்சலா மாரடைப்பால் காலமானார்.

News image
Updated On :22 நவம்பர் 2023, 12:38 pm IST

மலையாள எழுத்தாளரும், சாகித்ய அகாதெமியின் முன்னாள் தலைவருமான பி.வல்சலா(85 வயது) மாரடைப்பால் நேற்று (நவம்.21) காலமானார்.

கேரளாவின் கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மலையாள எழுத்தாளர் பி.வல்சலா திடீர் மாரடைப்பால் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு உயிரிழந்தார்.

வயநாட்டில் உள்ள பழங்குடியின மக்களின் வாழ்க்கையை பிரதிபலித்து 1972-ல் வெளியான ‘நெல்லு’ நாவலின் மூலம் பரவலாக அறியப்பட்டார்.

விலாபம், கானல், பாளையம் உள்ளிட்ட பல்வேறு நாவல்கள் மற்றும் சிறுகதைகளை எழுதியுள்ளார்.

கேரள சாகித்ய அகாதெமி விருது, எழுத்தச்சன் விருது, சி.வி.குன்னிராமன் நினைவு சாகித்ய அகாதெமி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார். 

பி.வல்சலா சாகித்ய அகாதெமி நிறுவனத்தின் தலைவராகவும் சில காலம் பணியாற்றியுள்ளார்.

இவரது கணவர் அப்புக்குட்டி, மகள் மினி மற்றும் மகன் அருண் ஆகியோருடன் கேரளாவில் வாழ்ந்துவந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.