மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

உ.பி : தலித் சிறுவன் மீது தாக்குதல் - சிறுநீர் குடிக்க வற்புறுத்தியதாக புகார்

உத்தரப்பிரதேசத்தில் தலித் சிறுவனை தாக்கி சிறுநீர் குடிக்க வற்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :26 நவம்பர் 2023, 8:14 pm IST

லக்னோ :  உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் தலித் பிரிவை சார்ந்தவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இந்தநிலையில், உத்தரபிரதேசத்தின் சுஜான்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில், 14 வயதான தலித் சிறுவனை தாக்கி சிறுநீர் குடிக்க வற்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து சிறுவனின் தந்தை அளித்துள்ள புகாரில் தெரிவித்திருப்பதாவது, “கடந்த சில நாள்களுக்கு முன்பு, அதே கிராமத்தை சேர்ந்த சிலர், சிறுவனை அடித்து துன்புறுத்தியதோடு,  சிறுநீர் குடிக்க வற்புறுத்தியுள்ளனர்”  என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகாரின் அடிப்படையில்,  காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து  மேற்கொண்ட விசாரணையில்,  அதே  கிராமத்தை சேர்ந்த இருவர், சிறுவனை அடித்து காயப்படுத்தியுள்ளனர் என்பதும், சிறுவனை சிறுநீர் குடிக்க வற்புறுத்தியதாக தெரிவிக்கப்பட்ட தகவல் உண்மைக்கு புறம்பானது என்பதும்  தெரிய வந்தது.

இந்தநிலையில், சிறுவனை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள் தரப்பில் சிறுவன் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது. அதில், “பாதிக்கப்பட்ட சிறுவன் தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, அவர்களது குடும்பத்தை  சேர்ந்த சிறுமியை குறித்து,   அவதூறாக பேசி வந்ததாக" தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில், சிறுவன் மற்றும் அவனது நண்பர்கள் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக  காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.