பஞ்சாப் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த மற்றுமொரு பாகிஸ்தான் ட்ரோன் எல்லைப் பாதுகாப்புப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. பாகிஸ்தானிலிருந்து கடத்திவரப்பட்ட ஐந்து கிலோ ஹெராயின் மற்றும் ஒரு பிஸ்டன் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகப் பஞ்சாப் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பஞ்சாப் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தங்கள் எக்ஸ் வலைதளப் பக்கத்தில், நவ.26 அதிகாலையில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, அமிர்தசரசில் உள்ள சக் அல்லா பக்ஷ் கிராமத்தில் நடத்தப்பட்ட சோதனையில், ஒரு பாகிஸ்தான் ட்ரோன், ஐந்து கிலோ ஹெராயின் மற்றும் ஒரு பிஸ்டன் துப்பாக்கியுடன், மொத்தம் 20 குண்டுகளைக் கொண்ட 2 மேகசின்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க : யானை தாக்கி விவசாயி பலி!
மேலும் கடந்த 10 மாதத்தில் மட்டும் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்த 69 பாகிஸ்தான் ட்ரோன்கள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவற்றுள் பெரும்பான்மை ட்ரோன்கள் போதைப் பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று தேரோட்டம்
போலி வாகன காப்பீடு வழங்கிய நெல்லை இளைஞா் கைது

தூத்துக்குடியில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

தூத்துக்குடியில் வாக்கு எண்ணும் பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


