மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

விமானத்திலேயே இந்த கதியா? கலங்கிய பயணி

பயணி ஒருவரின் இருக்கைக்கு குஷன் இல்லாமல் வெறும் இருக்கை மட்டும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :27 நவம்பர் 2023, 6:16 am

DIN


புனேவிலிருந்து நாக்பூர் சென்ற இண்டிகோ விமானத்தில், பயணி ஒருவரின் இருக்கைக்கு குஷன் இல்லாமல் வெறும் இருக்கை மட்டும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுவரை, விமான நிலையத்தில் உடைமைகள் உடைவது, தொலைவது போன்ற செய்திகள்தான் வெளியாகியிருக்கின்றன. பொதுவாக பேருந்துகளில்தான் இருக்கைகள் இருக்காது, இருக்கைகளில் சாய்வு குஷன் இருக்காது, மழை பெய்தால் ஒழுகும் என்று செய்திகள் வெளியாகியிருக்கும்.

ஆனாவ்ல, முதல் முறையாக, ஞாயிறன்று புனேவிலிருந்து நாக்பூர் சென்ற விமானத்தில் 10ஏ என்ற இருக்கையில் பயணம் செய்யவிருந்த சகாரிகா என்ற பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது இருக்கையில் வெறும் பிளாஸ்டிக் பகுதி மட்டுமே இருந்தது. அதில் குஷன் இல்லை. வேறு ஏதேனும் காலி இருக்கை இருந்தால் அதில் அமரும்படி பணிப்பெண்கள் கூறியுள்ளனர். ஆனால் காலி இருக்கை இல்லாததால் விமானம் புறப்படும் வரை சகாரிக்கா நின்றுகொண்டிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

பிறகு மற்ற பயணிகள் குரல் எழுப்ப, உடனடியாக, வேறு இருக்கையிலிருந்து குஷன் கொண்டு வரப்பட்டு, இந்த இருக்கையில் பொருத்தி பயணி அமரவைக்கப்பட்டுள்ளார்.

இதனை தான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்று அவரது கணவர் சுப்ரத் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.