அஸ்ஸாம்: 15 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்!

அஸ்ஸாம் மாநிலத்தில் 15 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டு இருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

அஸ்ஸாம் மாநிலம் காம்ருப் மாவட்டத்தில் 15 கோடி மதிப்பிலான ஹெராயின் வைத்திருந்த இருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அஸ்ஸாம் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய இந்தச் சோதனையில் 1.8 கிலோ மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

மேலும், குற்றவாளிகள் வண்டியை நிறுத்தாமல்  தப்பிக்க முயற்சி செய்தபோது,  காவல்துறையினர் வண்டியின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திக் குற்றவாளிகளை மடக்கிப்பிடித்தனர் எனக் காவல்துறைத் துணைத்தலைவர்  பார்த்த சாரதி மகந்தா தெரிவித்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் மணிப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட இருவரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com