டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மணிப்பூர் வன்முறை பற்றி புத்தகம் எழுதியவர் மீது வழக்கு!

மணிப்பூர் வன்முறைச் சம்பவத்தைப் பற்றி புத்தகம் எழுதியவர் மீது அஸ்ஸாம் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. 

News image
Updated On :28 நவம்பர் 2023, 12:11 pm

DIN

மணிப்பூர் வன்முறையைப் பற்றி மணிப்பூர் ஃபைல்ஸ் (மணிப்பூர் கோப்புகள்) என்கிற புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் பிரணவானந்த தாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் மாநிலம் சில்சார் பகுதியைச் சேர்ந்த இந்த எழுத்தாளர் மீது இரு சமூகத்தினருக்கிடையே பகைமையை வளர்க்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தில் வெறும் ஒரு பக்கத்தின் நியாயத்தை மட்டுமே கூறி இரு சமூகத்தினருக்கு இடையே வெறுப்பை வளர்க்க பிரணவானந்த தாஸ் முயற்சிக்கிறார் என கங்லேயபாக் கன்பா லுப் என்ற அமைப்பின் இளைஞரணித் தலைவர் புகார் செய்துள்ளார்.

அஸ்ஸாம் மாநிலம்  சேர்ந்த இந்த எழுத்தாளர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்திலிருந்து நடந்துகொண்டிருக்கும் மெய்தி மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையேயான இந்தப் பிரச்னையில் இதுவரை 180க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.