சூரத்தில் ரசாயன தொழிற்சாலையில் தீ

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் புதன்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். 
கோப்புடம்
கோப்புடம்
Published on
Updated on
1 min read

சூரத் (குஜராத்): குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் புதன்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். 

சூரத்தில் உள்ள சச்சின் ஜிஐடிசி பகுதியில் செயல்பட்டு வரும் ரசாயன தொழிற்சாலையில் இருந்து புதன்கிழமை காலை திடீரென பயங்கர தீ பிழம்புகளும் புகைமூட்டமாக இருந்துள்ளது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலை அடுத்து தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் தனியார் நிறுவனங்களின் நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். 

உயிரிழப்புகள், சேதங்கள் மற்றும் தீ விபத்துக்கான காரணம் குறித்த எந்த தகவலும் இதுவரை தெரியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com