தானே: போக்சோ சட்ட வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தானே நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிறப்பு நீதிபதி டி.எஸ்.தேஷ்முக் தனது சமீபத்திய உத்தரவில், ரோஹித்துக்கு ரூ.2,500 அபராதம் விதித்தார்.
இந்நிலையில் நவம்பர் 19, 2017 அன்று, ரோஹித் பாதிக்கப்பட்ட பெண்ணை முத்தமிட்ட பிறகு தகாத முறையில் தொட்டார் என்று சிறப்பு அரசு வழக்கறிஞர் விவேக் வாதிட்டார். இதனையடுத்து இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் பிரிவுகளின் கீழ் பாலியல் வன்கொடுமை மற்றும் பிற குற்றங்களுக்காக ரோஹித்துக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தானே நீதிமன்றம் தீர்ப்பளித்தது.