மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிக்கிமில் மத்தியக் குழு ஆய்வு

சிக்கிம் மாநிலத்துக்கு இன்று நேரில் சென்ற மத்தியக் குழு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர்.

News image
Updated On :9 அக்டோபர் 2023, 12:35 pm

DIN

கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிக்கிம் மாநிலத்துக்கு இன்று நேரில் சென்ற மத்தியக் குழு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர்.

மத்திய அமைச்சகங்களின் பல்வேறு துறை அதிகாரிகளை உள்ளடக்கிய மத்தியக் குழுவானது, வெள்ளப் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ததோடு, மாநில முதன்மைச் செயலர் பதக் மற்றும் மாநில அரசு உயர் அதிகாரிகளையும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியது.

பிறகு, காங்டோக், பாக்யோங், மங்கன் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவுகளை நேரில் ஆய்வு செய்தனர். பல்வேறு சேதமடைந்த பாலங்களையும் குடியிருப்புப் பகுதிகளையும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

மஜிகோன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்கும் சென்று அங்கு நடந்து வரும் நிவாரணப் பணிகளையும் ஆய்வு செய்தனர்.

சிக்கிம் வெள்ளத்தில் மாயமான 13 ராணுவ வீரா்கள் உள்பட 122 பேரை தேடும் பணி தொடர்ந்து நீடித்து வருகிறது. இதுவரை 9 ராணுவ வீரா்கள் உள்பட 32 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வடக்கு சிக்கிமில் கடந்த வாரம் புதன்கிழமை மேக வெடிப்பால் பெய்த கனமழையால், தீஸ்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுங்தாங் பகுதியில் நீா்மின் திட்ட அணை உடைந்து, பாக்யாங், கேங்டாக் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்தது.

சிங்டம் பகுதியில் திடீா் வெள்ளத்தில் சிக்கி, 23 ராணுவ வீரா்கள் காணாமல் போயினா். அவா்களில் ஒருவா் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டாா். 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

மீதமுள்ள ராணுவ வீரா்கள் உள்பட 122 பேரை தேடும் பணி நீடித்து வருகிறது. சிறப்பு ரேடாா்கள், ஆளில்லா விமானங்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிக்கிமை நாட்டின் இதர பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய சாலையான தேசிய நெடுஞ்சாலை-10 கடுமையாக சேதமடைந்துள்ளது. மேலும் 13 பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. இதனால், வடக்கு சிக்கிமின் பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். நிவாரண முகாம்களில் சுமாா் 7,000 போ் தங்கவைக்கப்பட்டுள்ளனா். 1,300-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

வெள்ளத்தில் ராணுவ ஆயுதங்கள், வெடிபொருள்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. எனவே, ஆற்றங்கரையோரத்தில் சந்தேகத்துக்கு இடமான பொருள்களை கண்டால், அதை எடுக்க வேண்டாம்; காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.