ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு மேலும் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு தொடர்புடைய பணமோசடி வழக்கில் கைதான ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 10 வரை அமலாக்கத்துறை விசாரணைக்கு தில்லி நீதிபதி அனுமதி அளித்தார்.
இதையடுத்து, சஞ்சய் சிங் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சாட்டி மேலும் ஐந்து நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியது.
இந்த நிலையில், 5 நாள் காவல் இன்றோடு நிறைவடைந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சஞ்சய் சிங்கிற்கு, மேலும் 3 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க ரோஸ் அவென்யு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.