டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பஞ்சாப்: காரர் காவல் நிலையத்தில் பயங்கர தீ விபத்து

பஞ்சாபில் காரர் காவல் நிலையத்தில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 

News image
Photo Courtesy, PTC NEWS
Updated On :13 அக்டோபர் 2023, 2:05 pm

DIN

பஞ்சாபில் காரர் காவல் நிலையத்தில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
பஞ்சாப் மாநிலம், மொஹாலி மாவட்டத்தில் உள்ள காரர் காவல் நிலையத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட போராட்டத்துக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த விதமான காயங்களும் ஏற்படவில்லை.
அதேசமயம் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்தன. தீவிபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 
கடந்த மாதம் குரலி கிராமத்தில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.