உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத்தின் கார் விபத்துக்குள்ளானதில், நூலிழையில் அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில்,
ஹல்த்வானியிலிருந்து காசிபூருக்குச் சென்றுகொண்டிருந்த போது கார் நிலைதடுமாறி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலைத்தடுப்பின் மீது மோதியது. லேசான காயங்கள் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சைகள் மேற்கொண்டேன். தற்போது நலமாக உள்ளேன்.
இந்த சம்பவம் குறித்து சில நண்பர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். இது சிலரிடையே கவலையே ஏற்படுத்தியுள்ளது. கவலைப்பட ஒன்றுமில்லை. நான் நன்றாக இருக்கிறேன். எனது சக ஊழியர்களும் நலமாக உள்ளனர் என்று ராவத் இந்தியில் பதிவிட்டுள்ளார்.
ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ராவத் கடந்த 2014 முதல் 2017 வரை உத்தரகண்ட் முதல்வராகப் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.