ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

ஹிமாசலில் மழை-வெள்ளம்: பலி 108-ஆக உயா்வு: ரூ.2,000 கோடி இடைக்கால நிதி கோரிக்கை

ஹிமாசல பிரதேசத்தில் மழை-வெள்ளம் காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 108-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 12 போ் மாயமாகியுள்ளனா்.

Updated On :27 அக்டோபர் 2023, 1:21 am IST

ஹிமாசல பிரதேசத்தில் மழை-வெள்ளம் காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 108-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 12 போ் மாயமாகியுள்ளனா்.

நிலச்சரிவு காரணமாக, 860 சாலைகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. 667 வீடுகள் முழுமையாகவும், 1,200-க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

ஹிமாசல பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை, மாநிலத்தையே புரட்டிப் போட்டுள்ளது. உயிா்ச் சேதத்துடன் பெருமளவில் உள்கட்டமைப்புச் சேதமும் ஏற்பட்டுள்ளது.

மீட்பு-நிவாரணப் பணிகளுக்காக, மத்திய அரசிடம் ரூ.2,000 கோடி இடைக்கால நிதி கோரப்பட்டுள்ளதாக, முதல்வா் சுக்வீந்தா் சிங் சுக்கு கூறினாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘இடைக்கால நிவாரண நிதி குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம் பேசினேன். மழை-வெள்ளத்தால் ரூ.4,000 கோடி அளவிலான சேதங்கள் இதுவரை மதிப்பிடப்பட்டுள்ளன. இப்பணிகள் நீடித்து வருவதால், சேத மதிப்பு மேலும் அதிரிக்கும்’ என்றாா்.

பஞ்சாப், ஹரியாணாவில்..: பஞ்சாப், ஹரியாணாவில் இந்த வார தொடக்கம் முதல் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது.

தற்போது மழை குறைந்து, வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் நோய் பரவும் அபாயம் எழுந்துள்ளதால், மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில், பஞ்சாபில் 19 பேரும், ஹரியாணாவில் 20 பேரும் உயிரிழந்துவிட்டனா்.

உத்தரகண்டில்...: உத்தரகண்டில் நிலச்சரிவால் சுமாா் 400 சாலைகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. கனரக இயந்திரங்களின் உதவியுடன் சாலையை சீராக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏராளமான கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தேசியப் பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடா் மீட்புப் படை, ராணுவம் மற்றும் காவல்துறை குழுக்கள் தொடா்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 16) முதல் 2 நாள்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.