உ.பி.யில் 1,700ஐ தாண்டிய டெங்கு பாதிப்பு!

உத்தரப் பிரதேசத்தில் டெங்கு பாதிப்பு 1,700ஐ தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
உ.பி.யில் 1,700ஐ தாண்டிய டெங்கு பாதிப்பு!

உத்தரப் பிரதேசத்தில் டெங்கு பாதிப்பு 1,700ஐ தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

லக்னௌவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 37 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளன. 

ஐஷ்பாக், அலிகஞ்ச், சந்திரா நகர், கோசைங்கஞ்ச், இந்திரா நகர், சின்ஹாட், ககோரி, என்கே சாலை, செஞ்சிலுவைச் சங்கம், சில்வர் ஜூபிலி மற்றும் துரியாகஞ்ச் பகுதிகளின் சமூக சுகாதார மையங்களிலிருந்து வழக்குகள் பதிவாகியுள்ளன. 

டெங்கு பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் மனோஜ் அகர்வால் தெரிவித்தார். அவர்களை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சியினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் இருப்பது, தண்ணீர் நிரம்பிய தொட்டிகள், தொட்டிகளை மூடி வைப்பது, குளிரூட்டிகளை வாரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்வதும், முழுக்கை ஆடைகளை அணிவதன் அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

கடந்த 30 நாள்களில், நகரத்தில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் 3 புதிய டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. டெங்குவுக்கு ஒருவர் பலியாகியுள்ளனர். 

கோமதி நகர், இந்திராநகர் மற்றும் அலிகஞ்ச் போன்ற பகுதிகளில் அதிகமாகப் பதிவாகி வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நவம்பர் வரை இந்நிலை தொடரும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com