வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் அறிவியல்பூர்வ ஆய்வு மேற்கொண்டுவரும் தொல்லியல் துறையினர் இறுதி அறிக்கை சமர்ப்பிக்க மேலும் 8 வார காலம் அவகாசம் கோரியுள்ளனர்.
மசூதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள ஏற்கெனவே வழங்கப்பட்ட 4 வார கால அவகாசம் இன்றுடன் (செப். 2) முடியவுள்ள நிலையில், தொல்லியல் துறையினர் மேலும் அவகாசம் கோரியுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை அறிவியல்பூா்வ ஆய்வு மேற்கொள்ள அனுமதி அளித்து அலாகாபாத் உயா்நீதிமன்றம் (ஆகஸ்ட்) கடந்த 3ஆம் தேதி உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து மசூதியில் சிவலிங்கம் உள்ளதாக சீலிடப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைந்துள்ள பகுதியைத் தவிர மற்ற பகுதிகளில் பள்ளம் தோண்டாமல் ஆய்வுப் பணிகளை தொல்லியல் துறை மேற்கொண்டு வந்தது.
பள்ளம் தோண்டக்கூடாது என்பதற்காக ரேடார் கருவிகளையும் தொல்லியல் துறை பயன்படுத்தியது.
இந்நிலையில், மேலும் ஆய்வு செய்யவும், அறிக்கை சமர்ப்பிக்கவும் கூடுதலாக 8 வாரங்களை அவகாசமாக அளிக்குமாறு தொல்லியல் துறை கோரியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்

கருப்பு படத்தின் புதிய போஸ்டர்!

மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்

காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்
வீடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு


