ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

இந்தியா கேட் அருகே நடைப்பயிற்சி செய்ய வேண்டாம்!

ஜி-20 மாநாட்டையொட்டி இந்தியா கேட் அமைந்துள்ள பகுதி முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வர வேண்டாம்

News image
Updated On :6 செப்டம்பர் 2023, 8:46 pm IST

தில்லியிலுள்ள இந்தியா கேட் எனப்படும் இந்தியாவின் நுழைவு வாயில் அருகே நடைப்பயிற்சியோ, சைக்கிள் பயிற்சியோ மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஜி-20 மாநாட்டையொட்டி இந்தியா கேட் அமைந்துள்ள பகுதி முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வர வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய காவல் துறை சிறப்பு ஆணையர் எஸ்.எஸ். யாதவ், இந்தியா கேட் மற்றும் ராஜ பாதை அருகே பொதுமக்கள் நடைப்பயிற்சியோ, சைக்கிள் பயிற்சியோ மேற்கொள்ள வேண்டாம். அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதேபோன்று அதிகாலை 4 மணிமுதல் ரயில்களை இயக்க மெட்ரோ நிர்வாகத்துக்கு கோரிக்கை வைக்கிறேன். இதனால் பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்கலாம் எனக் குறிப்பிட்டார். 

2023ஆம் செப்டம்பர் 09 மற்றும் 10ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சிமாநாட்டையொட்டி தில்லி நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.