எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

செய்யவும் மாட்டேன், செய்யவிடவும் மாட்டேன்.. பிரதமர் குறித்து காங்கிரஸ்

பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டிருந்த தகவலையடுத்து, செய்யவும் மாட்டேன், செய்யவிடவும் மாட்டேன் என்று காங்கிரஸ் கட்சி கருத்துக் கூறியிருக்கிறது.

News image
ஜெய்ராம் ரமேஷ்
Updated On :11 செப்டம்பர் 2023, 12:22 pm

DIN


புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டிருந்த தகவலையடுத்து, செய்யவும் மாட்டேன், செய்யவிடவும் மாட்டேன் என்று காங்கிரஸ் கட்சி கருத்துக் கூறியிருக்கிறது.

இந்தியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள வந்த அமெரிக்க அதிபர்  ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது, இந்தியாவில் மனித உரிமைகளை மதிப்பது, பத்திரிகை சுதந்திரம் குறித்து பேசியதாக வியத்நாமில் தெரிவித்திருந்தார்.

இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு முடிவடைந்ததும், புது தில்லியிலிருந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது வியத்நாம் பயணத்தை மேற்கொண்டார்.

வியத்நாம் பயணத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், 'மனித உரிமைகளை மதிப்பது' மற்றும் 'பத்திரிக்கை சுதந்திரம்' போன்ற பிரச்னைகள் குறித்து தான் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது எழுப்பியதாக குறிப்பிட்டிருந்தார்.

ஜோ பைடனின் இந்த தகவலைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்திட்டுள்ளார். அதாவது, பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம், நான் செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன், யாரையும் சந்திக்க விடவும் மாட்டேன் என்பதே, இது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில்தான், வியத்நாமில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மனித உரிமைகள், பொது சமூகத்தின் பங்கு மற்றும் சுதந்திரப் பத்திரிகையின் பங்கு பற்றி, இந்தியாவில் பிரதமர் மோடியிடம் அவர் சொன்ன அதே விஷயங்களை வியத்நாமில் பைடன் பகிர்ந்துள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், அமெரிக்க அதிபர்  ஜா பைடனின் குழுவினரை, பிரதமர் - அதிபருக்கு இடையே நடந்த சந்திப்பின்போது பேசப்பட்ட விஷயங்கள் குறித்து புது தில்லியில் செய்தியாளர்கள் சந்தித்துக் கேள்வி எழுப்ப அனுமதிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.