கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஸ்பெயின் மற்றும் துபை நாடுகளுக்கு 11 நாள் அரசு முறைப்பயணமாக இன்று செல்கிறார்.
செவ்வாயன்று, கொல்கத்தாவிலிருந்து துபைக்கு விமானம் மூலம் செல்லும் மம்தா பானர்ஜி, அங்கிருந்து ஸ்பெயின் செல்கிறார்.
ஸ்பெயின் தலைவர் மாட்ரிட்டில் மூன்று நாள்கள் தங்கியிருந்து, வணிக மாநாட்டில் கலந்து கொண்டு, மேற்கு வங்க மாநிலத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் பணிகளை மேற்கொள்கிறார்.
பிறகு அங்கிருந்து பார்சிலோனா சென்று, மேற்குவங்க, உலக வணிக மாநாட்டில் பங்கேற்கிறார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது என்றும், மத்திய அரசு, வெளிநாடு செல்ல தேவையான அனுமதியை இதுவரை வழங்காமல் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாட்ரிட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில், இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சௌரவ் வங்குலியும் மம்தா பானர்ஜியுடன் பங்கேற்கவிருக்கிறார்.