கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் எந்த சிறப்பும் இல்லை: டி.ஆர். பாலு பேச்சு

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் எந்த சிறப்பும் இல்லை என்று மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு பேசினார்.

News image

திமுக எம்பி டி.ஆர். பாலு

Updated On :18 செப்டம்பர் 2023, 9:01 am

DIN

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் எந்த சிறப்பும் இல்லை என்று மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு பேசினார்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று(செப். 18) தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாறு குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. 

ஏனெனில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நாளை(செப். 19) முதல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற உள்ளது. 

இந்நிலையில் இன்று மக்களவையில் பேசிய திமுக எம்.பி. டி.ஆர். பாலு, '1962 முதல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக முக்கிய அங்கம் வகித்துள்ளது. இந்த சிறப்புக் கூட்டத்தொடரில் எந்த சிறப்புகளும் இல்லை. 

நாட்டில் கடும் நிதி நெருக்கடி இருக்கும் சூழ்நிலையில் அதிக செலவு செய்து புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான இறுதி கூட்டத்தொடரை இங்கு நடத்தலாமே? நல்ல நாள், நல்ல நேரத்தைவிட, மக்களுக்கு தேவையான நல்ல விவாதங்கள் இருக்க வேண்டும். 75 ஆண்டு கால நாடாளுமன்ற வரலாற்றில் திமுக உள்ளிட்ட பல மாநில கட்சிகளுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு

ஜனநாயகத்திற்கு புறம்பான சில மசோதாக்களை நிறைவேற்றவே இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. காஷ்மீர், மணிப்பூர், தமிழ்நாடு உள்பட எந்த மாநிலத்துக்கும் பா.ஜ.க அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை' என்று பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.