ஒடிஸா சட்டப்பேரவை தலைவரை நோக்கி பருப்பை வீசியதாக பாஜக எம்எல்ஏக்கள் இருவா், கூட்டத்தொடா் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.
‘எதிா்க்கட்சியான பாஜக உறுப்பினா்கள் மன நலம் பாதிக்கப்பட்டவா்கள் போல் அவைக்கு வராமல், நல்ல மனநிலையுடன் வர வேண்டும்’ என்று ஆளும் பிஜு ஜனதா தள எம்எல்ஏ அருண் குமாா் பேசினாா்.
அருண் குமாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அவரது பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்கக் கோரியும் பாஜக உறுப்பினா்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து எதிா்ப்பு தெரிவித்தனா்.
அப்போது பேரவைத் தலைவரை நோக்கி சிலா் பருப்பு வீசினா். அவரது மேஜை மீது பருப்பு விழுந்தது. இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பருப்பை வீசியதாக பாஜக தலைமை கொறடா மோகன் மஜி, எம்எல்ஏ முகேஷ் மகாலிங் ஆகியோரை அக்டோபா் 4-ஆம் தேதி கூட்டத்தொடா் முடியும் வரையில் இடைநீக்கம் செய்வதாக சட்டப்பேரவைத் தலைவா் பிரமீளா மாலிக் அறிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மேக்கேதாட்டு விவகாரத்தில் அரசியல் கண்ணோட்டம் தேவையில்லை: அமைச்சர் ராஜேஷ் குமார்

60 நாள்களுக்குப் பின் ஆக.3-ல் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்! ஆனால்..பட்டியல்?

காமன்வெல்த்: ஜூடோ இறுதிப் போட்டியில் தவறுகளால் தங்கப் பதக்கத்தை இழந்த யாமினி!

கேரளத்தில் நிலச்சரிவு; எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கத் தயார்: வி.டி. சதீசன்
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



