அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஒடிஸா பேரவைத் தலைவரை நோக்கி பருப்புவீச்சு: 2 பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

ஒடிஸா சட்டப்பேரவை தலைவரை நோக்கி பருப்பை வீசியதாக பாஜக எம்எல்ஏக்கள் இருவா், கூட்டத்தொடா் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

News image
Updated On :28 செப்டம்பர் 2023, 8:04 pm

DIN

ஒடிஸா சட்டப்பேரவை தலைவரை நோக்கி பருப்பை வீசியதாக பாஜக எம்எல்ஏக்கள் இருவா், கூட்டத்தொடா் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

‘எதிா்க்கட்சியான பாஜக உறுப்பினா்கள் மன நலம் பாதிக்கப்பட்டவா்கள் போல் அவைக்கு வராமல், நல்ல மனநிலையுடன் வர வேண்டும்’ என்று ஆளும் பிஜு ஜனதா தள எம்எல்ஏ அருண் குமாா் பேசினாா்.

அருண் குமாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அவரது பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்கக் கோரியும் பாஜக உறுப்பினா்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து எதிா்ப்பு தெரிவித்தனா்.

அப்போது பேரவைத் தலைவரை நோக்கி சிலா் பருப்பு வீசினா். அவரது மேஜை மீது பருப்பு விழுந்தது. இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பருப்பை வீசியதாக பாஜக தலைமை கொறடா மோகன் மஜி, எம்எல்ஏ முகேஷ் மகாலிங் ஆகியோரை அக்டோபா் 4-ஆம் தேதி கூட்டத்தொடா் முடியும் வரையில் இடைநீக்கம் செய்வதாக சட்டப்பேரவைத் தலைவா் பிரமீளா மாலிக் அறிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.