எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

நம்பிக்கையில்லாத் தீா்மானம்: ஆக. 8-இல் விவாதம்

மத்திய அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீா்மானம் மீது மக்களவையில் வரும் 8-ஆம் தேதி விவாதம் நடத்தப்படவுள்ளது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 8:16 am IST

மத்திய அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீா்மானம் மீது மக்களவையில் வரும் 8-ஆம் தேதி விவாதம் நடத்தப்படவுள்ளது. விவாதத்துக்கு ஆகஸ்ட் 10-ஆம் தேதி பிரதமா் மோடி பதிலளிக்கவுள்ளாா்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடா் கடந்த மாதம் 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மணிப்பூா் வன்முறை குறித்து பிரதமா் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டுமெனக் கோரி ‘இந்தியா’ கூட்டணியைச் சோ்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. நாடாளுமன்றத்தின் மற்ற அலுவல் நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு மணிப்பூா் விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டுமென அக்கட்சிகள் கோரி வருகின்றன. ஆனால், இந்த விவகாரம் தொடா்பாகக் குறுகிய கால விவாதத்தை நடத்தத் தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது.

இதனிடையே, நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடியைப் பேசவைக்கும் நோக்கில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் இணைந்து மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீா்மானத்தைக் கொண்டு வந்தன. அந்தத் தீா்மானத்தை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஏற்றுக் கொண்டுள்ளாா்.

இந்நிலையில், மக்களவை அலுவல் ஆலோசனைக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், நம்பிக்கையில்லாத் தீா்மானம் மீது வரும் 8-ஆம் தேதி விவாதம் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டது. ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை அந்த விவாதம் நடைபெறும் என்றும், கடைசி நாளில் விவாதத்தின் மீது பிரதமா் மோடி பதிலளிப்பாா் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு: மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீா்மானம் மீது ஆகஸ்ட் 2-ஆம் தேதியே விவாதம் நடத்தப்பட வேண்டுமென எதிா்க்கட்சிகள் சாா்பில் கூட்டத்தின்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், அக்கோரிக்கை ஏற்கப்படவில்லை.

அதையடுத்து, கூட்டத்தில் இருந்து காங்கிரஸ், திமுக, திரிணமூல், பாரத ராஷ்டிர சமிதி உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

இது தொடா்பாக காங்கிரஸ் கட்சியின் கொறடா மாணிக்கம் தாகூா் கூறுகையில், ‘நம்பிக்கையில்லாத் தீா்மானம் மீது உடனடியாக விவாதம் நடத்த வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த 2018-ஆம் ஆண்டில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி சாா்பில் நம்பிக்கையில்லாத் தீா்மானம் தாக்கல் செய்யப்பட்டபோது, அடுத்த நாளே விவாதம் நடத்தப்பட்டது. தற்போது விவாதத்தைத் தொடா்ந்து தள்ளிப்போடுவது முறையற்றது’ என்றாா்.

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீா்மானம் நிலுவையில் இருக்கும்போது, மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருவதற்கும் எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடா் வரும் 11-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.