

வடமேற்கு தில்லியின் பவானாவில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்ததனர்.
இந்த தீ விபத்து சம்பவம் புதன்கிழமை இரவு 10.56 மணியளவில் நடைபெற்றது. சம்பவ இடத்திற்கு 30 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பவானா தொழில்துறை பகுதியில் உள்ள செக்டார்-5ல் இந்த தொழிற்சாலை அமைந்துள்ளது.
தொழிற்சாலையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும், இதன் காரணமாக சுவர் மற்றும் கேட் இடிந்து விழுந்தது. இந்த தீ விபத்தைக் கட்டுப்படுத்த சென்ற 6 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மகரிஷி வால்மீகி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.