தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

கொல்கத்தாவில் குடியரசுத் தலைவர் முர்மு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விந்தியகிரி போர்க் கப்பலைத் தொடங்குவதற்காக கொல்கத்தாவுக்கு இன்று காலை வந்தடைந்தார். 

News image
Updated On :17 ஆகஸ்ட் 2023, 6:47 am

DIN

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விந்தியகிரி போர்க் கப்பலைத் தொடங்குவதற்காக கொல்கத்தாவுக்கு இன்று காலை வந்தடைந்தார். 

குடியரசுத் தலைவர் முர்முவை கொல்கத்தா விமான நிலையத்தில் மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் வரவேற்றார். 

கர்நாடகத்தில் உள்ள மலைத்தொடரில் பெயரால் அழைக்கப்பட்ட விந்தியகிரி திட்டம் 17A திட்டத்தின் ஆறாவது கப்பலாகும். இதனை கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் லிமிடெட்(GRSE)யில் குடியரசுத் தலைவர் முர்மு தொடங்கிவைக்க உள்ளார். 

இந்த திட்டத்தின் முதல் ஐந்து கப்பல்கள் 2019 மற்றும் 2022 க்கு இடையில் MDL மற்றும் GRSE- ஆல் தொடங்கப்பட்டுள்ளன. 

கடந்த ஆண்டு குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முர்மு மேற்கு வங்கத்துக்குச் செல்வது இது இரண்டாவது முறையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.