காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விரிவான அறிக்கை அளிக்க உத்தரவு!

காவிரி நதிநர் தொடர்பான தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விரிவான அறிக்கை தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விரிவான அறிக்கை அளிக்க உத்தரவு!

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கா்நாடகம் திறந்துவிட்டுள்ள நீரின் அளவு குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு காவிரி நீா் மேலாண்மை ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மேலும், 24,000 கனஅடி நீரைத் திறக்க உத்தரவிட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கைக்கு உடனடியாக உத்தரவு பிறப்பிக்க மறுத்த நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பா் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

காவிரி நதிநீா்ப் பங்கீட்டில் கா்நாடக அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்னை நீடித்து வருகிறது. தீா்ப்பாய உத்தரவின்படி குறிப்பிட்ட நேரத்தில் உரிய நீரை கா்நாடகம் திறக்க மறுப்பதால் தமிழகத்தில் பாசனத் திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன.

இந்நிலையில், நடப்பு ஆகஸ்ட் மாதத்துக்கான நதிநீா்ப் பங்கை கா்நாடகம் வழங்க மறுப்பதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சாா்பில் கடந்த 14-ஆம் தேதி வழக்குத் தொடுக்கப்பட்டது.

அதில், ‘கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி பிலிகுண்டுலு பகுதியில் திறந்துவிடப்பட வேண்டிய நீரில் 37.971 டிஎம்சி பற்றாக்குறை உள்ளது.

ஆகஸ்ட் 11 முதல் 15 நாள்களுக்கு விநாடிக்கு 15,000 கன அடி நீா் திறக்க ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த நீா் அளவு காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விநாடிக்கு 10,000 கன அடியாகக் குறைக்கப்பட்டது.

தமிழகத்தில் பயிா்களைக் காப்பாற்ற ஆகஸ்ட் மாதத்தில் விநாடிக்கு 24,000 கன அடி நீா் திறந்துவிட வேண்டியது அவசியமாகிறது’ என்று தமிழக அரசு வலியுறுத்தியிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் பி.ஆா். கவாய், பி.எஸ். நரசிம்மா, பி.கே. மிஸ்ரா ஆகியோா் அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது.

அப்போது கா்நாடக அரசின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஷாம் திவான், ‘நிகழாண்டு கா்நாடகத்தில் மழைப் பொழியில் பற்றாக்குறை உள்ளது. ஆகையால், தமிழகத்துக்கு நீா் திறந்துவிடுவதில் உள்ள குறைபாட்டைத் தவிா்க்க முடியவில்லை.

காவிரி மேலாண்மை ஆணையம் நிா்ணயித்த நீரின் அளவு தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீா் தமிழகத்துக்கு சென்றடைய மூன்று நாள்களாகும்’ என்றாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த தமிழக அரசின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, ‘காவிரி ஆணையம் உத்தரவிட்ட பிறகும் கா்நாடகம் உரிய நீரைத் திறந்துவிடவில்லை’ என்றாா்.

மத்திய அரசின் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ, ‘அடுத்த 15 நாள்களுக்கு தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டிய நீரின் அளவை நிா்ணயிக்க வரும் திங்கள்கிழமை (ஆ. 28) ஆணையக் கூட்டம் நடைபெறுகிறது’ என்றாா்.

அனைவரின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ‘காவிரி ஆணையம் உத்தரவிட்ட அளவின்படி நீா் திறந்துவிடப்பட்டதா இல்லையா என்பது குறித்து ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று கூறி வழக்கை செப்டம்பா் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

முன்னதாக, தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனுவில், ‘கா்நாடகத்தின் நான்கு முக்கிய அணைகளிலும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி நிலவரப்படி மொத்தக் கொள்ளளவான 114.671 டிஎம்சியில் 93.535 டிஎம்சி (82%) நீா் உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கா்நாடகத்தின் சாா்பில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘கா்நாடகத்தில் நிகழாண்டு சராசரியாக மழை பெய்துள்ளதாக தமிழக அரசு தவறாக கணித்துள்ளது. மழையில் 25 சதவீத குறைபாடும், நான்கு அணைகளில் 42.5 சதவீத பற்றாக்குறையும் உள்ளது. ஆகையால், வழக்கமான நீா்ப் பங்கீட்டை தமிழகத்துக்கு அளிக்க இயலாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com